6 வயது மகளை கொலை செய்த தந்தை விளக்கமறியலில்

237 0

கொட்டதெனியாவ  -கிதுல்வல – படதொலவத்த பிரதேசத்தில் தனது 6 வயது மகளை கொலை செய்ததாக குற்றச்சாட்டுப்பட்டுள்ள சந்தேக நபரான தந்தை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்று மீனுவாங்கொட மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனித கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுக்கு அமைய குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 23 ஆம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி தனது மகளை அவர் கொலை செய்துள்ளார்.

மேலும் தனது மனைவி மற்றும் 9 வயதான மேலும் ஒரு மகளையும் தாக்கி படுகாயமடைய செய்துள்ளார்.

மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a comment