யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பதினைந்து நாட்கள் நடைபெறும் உற்சவத்தின் போது எதிர்வரும் 8 ஆம் திகதி தேர் உற்சவமும் மறுநாள் தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.
9 ஆம் திகதி நடைபெறும் தீர்த்தோற்சவத்தில் மாலை கொடியிறக்கம் இடம்பெறவுள்ளது.
மறுநாள் 10ஆம் திகதி தெற்போற்சவம் நடைபெற்று வருடாந்த மகோற்சவம் நிறைவு பெறவுள்ளது