சைட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் சிறப்பு அறிக்கை

234 0

சைட்டம் நிறுவனம் தொடர்பில் அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலொன்று எதிர்வரும் தினத்தில் வௌியிடப்படும் என ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் அறிக்கையொன்றை வௌியிட்டு ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.அபேகோண் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை முழுமைப்படுத்தும் வரையில் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது நிறுத்தப்படவுள்ள நிலையில் , பட்டமளிப்பும் நிறுத்தப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment