தீர்வின்றி தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டங்கள்

216 0

நாட்டில்  இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கடத்தப்பட்டும் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டங்கள் இன்றும் தொடர்கின்றன.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 126 ஆவது நாளாக இடம்பெற்றுவருகின்றது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 110 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வவுனியா மாவட்டத்திலும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் போராட்டம் இன்று 122 ஆவது நாளை எட்டியுள்ளது.

எனினும் இப்போராட்டங்களுக்கு எவ்வித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில், மக்கள் வெவ்வேறு முறைகளில் தமது போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment