காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும்-பொதுமக்கள்

218 0

முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளைவிட்டு வெளியேற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேசசெயலகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற காணி எடுத்தற் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் காணி சுவீகரிப்பது தொடர்பில் ஆட்சேபனை இருப்பின் பதில் அனுப்பும்படி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த கடிதத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்திலேயே இந்த விடயம் வலியுறுத்தபட்டுள்ளது.

முள்ளிவாய்ககால் வட்டுவாகலில் பொதுமக்களின் 417 ஏக்கர் காணிகளை 2009 ஆம் ஆண்டு தொடக்கம் கடற்படையினர் சுவீகரித்து வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் வாழவ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் மக்கள் காணிகள் தொடர்பில் சகல தரப்பினரையும் சந்தத்து பல தடவைகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த காணி சுவீகரிப்பு தொடர்பில் மூன்று தடவைகள் தம்மிடம் கோரப்பட்டதாகவும் தாம் தொடர்ச்சியான எதிர்ப்பை வெளியிட்டதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது வாழ்வாதாரத்திற்கான குறித்த நிலங்களை தம்மிடம் கையளித்துவிட்டு இராணுவத்தினர் வேறு இடங்களிற்கு செல்ல வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment