பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தால், வெளிநாட்டிலிருந்து 5 ஆயிரம் வைத்தியர்கள்

226 0

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால், வெளிநாட்டிலிருந்த 5 ஆயிரம் வைத்தியர்களை வரவழைக்க கலந்துரையாடப்பட்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதற்குப் புறம்பாக பாதுகாப்புப் பிரிவிலுள்ள வைத்தியர்களையும் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு பயன்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் பணிப்பகிஷ்கரிப்பினால், நோயாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும், இதனாலேயே இந்த நடவடிக்கையை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று (24) ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் தமது பணிப்பகிஷ்கரிப்பை கைவிடத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment