கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடாத்த பிரத்தியேக இடங்கள்- அமைச்சரவைக்கு பிரேரணை

219 0

கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்குரிய இடங்களாக இரண்டு அல்லது மூன்று பகுதிகளை அடையாளப்படுத்துமாறு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிரேரணையொன்றை முன்வைக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர திட்டமிட்டுள்ளார்.

கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்பன நடாத்தப்படுவதனால், பாதைகளில் போக்குவரத்துக்கள் தடைப்பட்டு பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு உட்படுவதைத் தடுப்பதற்கே இந்த நடவடிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

இவ்வாறு ஆர்ப்பாட்டங்களுக்கென குறிப்பிட்ட பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டதன் பின்னர், வேறு இடங்களில் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதற்கும் அப்பிரேரணையில் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment