மல்வத்து பிரிவின் மகாநாயக்க தேரருடன் அமைச்சர்கள் சந்திப்பு

217 0

எதிர்வரும் நாட்களில் பல தரப்பட்ட வரிகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்குச் சென்று மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர், பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இச்சந்திப்பில், அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன ஆகியோரும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment