மலர்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு, ஆர்ப்பாட்டம்!

273 0

கொட்டகலை நகரின் நுழைவாயில் பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மலர்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதுடன் ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (25) காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கொட்டகலை நகரில் புதிதாக அமைக்கப்படவுள்ள மலர்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது எனக் கூறியும் ஏற்கனவே நகரின் மத்தியில் இயங்கிவரும் மலர்சாலையை நகரின் ஒதுக்குப்புர பகுதியில் இயங்குவதற்கு நவடிக்கை எடுக்க கோரியுமே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நகர மத்தியில் ஆலயத்திற்கருகில் மலர்சாலைகள் அமைக்கப்படுவதனால் வழிபாடுகளில் ஈடுபட முடியாதுள்ளதுடன் மங்கள நிகழ்வுகளும் நடாத்த முடியாதுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கையொப்பமிடப்பட்ட மகஜரொன்றையும் நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரியொருவர் கருத்து தெரிவிக்கையில் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த மலர்சாலைக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தார்.

Leave a comment