மாலபே சயிட்டம் நிறுவனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வருங்கால நடவடிக்கை குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவை பத்திரத்திரம் முன்வைக்கப்படவுள்ளது.
உயர்கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
சயிட்டம் பிரச்சினை தொடர்பில் நேற்று ஜனாதிபதியால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு வழங்கிய தீர்வும் இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது.
களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ராஜித்த இதனைக் கூறியுள்ளார்.