நாகை மீனவர்களுக்கு ஜூலை 7 வரை சிறை

486 0

இலங்கை கடலோரக் காவல் படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் எட்டு பேரையும் ஜூலை 7-ம் திகதி வரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து சில நாட்களே ஆன நிலையில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

நாகை மாவட்ட மீனவர்களும் மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகின்றனர். கடந்த 20-ந் திகதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன.

நேற்று இரவு 10 மணி அளவில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லையை தாண்டி வந்து விட்டதால் அவர்களை சிறைபிடித்து இலங்கை காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்களையும் சேர்த்து எல்லை கடந்து வந்து மீன் பிடித்ததாக இலங்கை கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment