பாகிஸ்தானில் தலிபான்கள் குண்டு தாக்குதல் காவல்துறையினர் பலர் பலி

240 0

பாகிஸ்தானில் தலிபான்கள் இன்று நடத்திய குண்டு தாக்குதலில் நான்கு காவல்துறையினர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டா நகரின் மையப்பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் காவல்துறை தலைமை அதிகாரி ஒருவரின் அலுவலகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

தற்கொலை குண்டுதாரி பயணித்த கார் தடுத்து நிறுத்தப்பட்டபோது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு படையை சேர்ந்த 9 பேர் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave a comment