உதய கம்மன்பில ஒற்றர்போல செயற்பட்டார் – நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க

277 0

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தமது கட்சியில் ஒற்றர்போல செயற்பட்டதாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்களை மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரிடம் கம்மன்பில கூறியதாக நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மைத்திரிபால சிறிசேனவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும்போதும், தேர்தல் விஞ்ஞாபனம் திட்டமிடும்போதும் கம்மன்பில உடனிருந்தார்.

அவை அனைத்தையும் செய்துவிட்டு மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துகொண்டு, சிறந்ததொரு அமைச்சுப் பதவியை பெற எதிர்பார்த்தார்.

அதன் விளைவுகளாகத்தான் அரசியலில் இன்று அவருக்கு இப்படியானதொரு நிலை ஏற்பட்டுள்ளது என்று நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க கூறியுள்ளார்.

Leave a comment