இலங்கைக்கு பிரவேசிக்கும் இந்திய படகுகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது – அமைச்சர் மஹிந்த அமரவீர  

260 0

இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்கும் இந்திய படகுகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் பிரச்சினையை இந்தியா முக்கிய பிரச்சினையாக எடு;த்துக்கொண்டுள்ளமையை அடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினையை தீர்க்க இந்தியாவுடன், பல சுற்றுப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் மஹி;ந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment