பல்வேறு குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் பொலீசாரால் கைது

232 0
மானிப்பாய் பகுதியில் கடந்த ஆண்டு பல்கலைக் கழக மாணவன் ஒருவனின் கையை வெட்டிய சம்பவம் உள்ளிட்ட வன்முறைகளுடன் தொடர்பு பட்டதான சந்தேகத்தில் கோப்பாய் பொலிசாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,
மானிப்பாய் பகுதியில் கடந்த ஆண்டு பல்கலைக் கழக மாணவன் ஒருவனின் கையை வெட்டியமை கொக்குவில் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியைமை    உள்ளிட்ட வன்முறைகளுடன் தொடர்பு பட்டதான சந்தேகத்தின் பெயரில் கோப்பாய் பொலிசாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அசோக் மோகன் என அழைக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஆவாக் குழுவுடன் இணைந்து செயல்பட்டதோடு வாள் வெட்டு , வீடு உடைப்பு , அடிதடி போன்ற பல வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டதன் பெயரிலும் ஆவாக் குழு என்னும் சமூக விரோத கும்பலுடன் இணைந்து செயல்பட்டதான சந்தேகத்தின் பெயரிலும் பொலிசாரால் நீண்டகாலம் தேடப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் பொலிசாரின் கண்ணில் படாது தலைமறைவாக வாழ்ந்த நிலையில் பொலிசாரால் இலக்கு வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கோப்பாய் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மறைந்திருந்த நிலையில் அசோக் மோகன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவரால் அதிக வன்முறையில் ஈடுபட்ட பிரதேசங்களாக யாழ்ப்பாணம் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவுகள் காணப்படுவதனால் இவ்விரு பொலிசாரில் ஓர் பொலிஸ் நிலையத்திடம் குறித்த சந்தேக நபர் கையளிக்கப்பட்டதும் அவர்களின் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Leave a comment