சைட்டம் விவகாரம் – வைத்திய அதிகாரிகள் குழுக்களுக்கு இடையில் மோதல்

225 0

சைட்டம் விவகாரம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, வைத்திய அதிகாரிகள் குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இதில் தாக்குதலுக்கு உள்ளான வைத்திய அதிகாரி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சைட்டம் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருதல் என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் நிறைவில், தேனீர் விருந்தின் போது இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திடம் கேட்ட போது, தேனீர் விருந்தின் போது, தேனீர் கோப்பை ஒன்று குறித்த வைத்திய அதிகாரிகளின் தலையில் வீழ்ந்ததால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், வாய்த்தர்க்கம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக கருவாத்தோட்டம் காவற்துறையினர் தெரிவித்துள்ளளனர்.

Leave a comment