முல்லைத்தீவில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வு

243 0
முல்லைத்தீவில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வுக்கு சுவிஸ் புளொட் தோழர்கள் அனுசரணை-
இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைகளை தமிழர் பகுதிகளில் நிறுவும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக  கடந்த 16.06.2017 அன்று முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் VGP நிறுவனத்தின் தலைவர் உட்பட சுமார் 30 பேர் வரையில் தமிழகத்தில் இருந்து வருகை தந்து கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் வடமாகாண சபையின் முல்லை மாவட்ட உறுப்பினரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளருமான க.சிவநேசன் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோரும் பங்கு பற்றியிருந்தனர்.
நிகழ்வில் திருவுருவச்சிலை குறித்த நினைவுக்கல் பதித்தல், விழாவுக்கு வருகைதந்திருந்த பிரமுகர்களுக்கான விருந்தோம்பல் ஆகியவற்றுக்கான செலவினை சுவிஸ் நாட்டிலிருந்து புளொட் தோழர்கள் செல்வபாலன், மனோ, தீபன் மற்றும் ராஜேந்திரம் ஆகியோர் பொறுப்பேற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a comment