நெடுந்­தீவு பிரதேச மக்களின் கோரிக்கைக்கு விரைவில் மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை

439 0
நெடுந்தீவைப் பாதுகாக்க தடுப்பு அணை விரைவில் பிரதேச மக்களின் கோரிக்கைக்கு மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை
நெடுந்­தீ­வுக் கடற்­க­ரை­யைக் கட­ல­ரிப்­பில் இருந்து பாதுகாப்­ப­தற்கு கடற்­க­ரை­யோர பாது­காப்பு திணைக்களத்தின் உத­வி­யு­டன் தடுப்பு அணை கட்­டப்­ப­டும் என்று    மாவட்­ட­செ­ய­லக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.
நெடுந்­தீவு பிர­தே­சத்தை அபி­வி­ருத்தி செய்­வது தொடர்­பிலான கலந்­து­ரை­யா­டல் நெடுந்­தீவு பிர­தேச செய­ல­கத்­தில்  நடை­பெற்­றது. அதில் இந்­தப் பிரச்­சினை தொடர்­பில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. அக் கூட்­டத்­தில் கலந்து ­கொண்ட மக்­கள் பிர­தி­நி­தி­கள்           தெரி­விக்­கை­யில்,
நெடுந்­தீவு பிர­தே­சம் நான்கு பக்­க­மும் கட­லால் சூழப்­பட்ட பிர­தே­சம். எமது                      பிர­தே­சத்தை கட­ல­ரிப்­பில் இருந்து பாது­காப்­ப­தற்­கான திட்­டங்­களோ அல்­லது       அதற்­கான ஏற்­பா­டு­களோ இது­வ­ரை­யில்லை. அத­னால் எமது பிர­தே­சம்                             கட­ல­ரிப்­புக்­குள்­ளாகி எமது தீவின் நிலப்­ப­குதி படிப்­ப­டி­யா­கக் கட­லுக்­குள் போய்க்­கொண்­டி­ரு­க்­கின்­றது.
இதற்­குத் தீர்வு காணா­து­விட்­டால் எமது நாட்­டுக்கு அயல்­நா­டான இந்­தி­யா­வில்           அத்­துப்­பட்டி என்ற கிரா­மம் வரை­ப­டத்­தில் இருந்து காணா­மல் போன­து­போல எமது நாட்­டில் நெடுந்­தீவு பிர­தே­சம் என்ற ஒன்றே இல்­லாது போய்­வி­டு­கின்ற அபா­யம்          ஏற்­பட்­டுள்­ளது.
1965 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­க­ளில் ஏற்­பட்ட சூறா­வ­ளி­யின் போது நெடுந்­தீ­வின் ஒரு பகுதி மிக மோச­மாக அரிக்­கப்­பட்டு சிறு­ப­குதி நீருக்­குள் போய்­விட்­டது. இனி­வ­ரும் காலங்­க­ளி­லும் இவ்­வா­றான இடர் ஏற்­ப­ட­லாம். அவ்­வாறு ஏற்­பட்­டால் எமது பகுதி மேலும் சடு­தி­யாக மூழ்­கும் அபா­யம் உள்­ளது.
இதனை உணர்ந்து சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் உட­னடி நட­வ­டிக்­கை எடுத்து எமது தீவு அழி­வ­டை­யாது பாது­காத்துத் தரு­மாறு கேட்­கின்­றோம்” என்­ற­னர்.
இதற்­குப் பதி­ல­ளித்த மாவட்­டச் செய­லக அதி­கா­ரி­கள், “நெடுந்­தீவு பிர­தே­சத்­தின்   கரை­யோ­ரப்­ப­கு­தி­கள் கட­ல­ரிப்­புக்­குள்­ளா­வது தொடர்­பில் நாம் ஆராய்ந்து                   வரு­கின்­றோம்.
நாம் கடற்­க­ரை­யோர பாது­காப்­புத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளு­டன் இணைந்து        இதற்­கான தீர்­வினை வழங்­கு­வது தொடர்­பில் ஆலோ­சிப்­போம். நாமும் குறித்த திணைக்­க­ள­மும் இணைந்து நெடுந்­தீ­வில் கடல் தடுப்பு அணை­கள் கட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­போம்” என்­ற­னர்.

Leave a comment