தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தமக்கு எந்த முரண்பாடும் இல்லை – சுரேஷ் பிரேமசந்திரன்

371 0
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தமக்கு எந்த முரண்பாடும் இல்லை என்று, ஈபிஆர்எல்எஃப் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீளப்பெறப்படாவிட்டால், நாடாளுமன்றத்திலும் தமது கட்சி உறுப்பினர்கள் தனித்து செயற்படுவர் என்று அவரால் அறிவிக்கப்பட்டது.
எனினும் இது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எஃப் விலகும் என்ற அர்த்தத்தில் கூறப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், இலங்கை தமிழரசு கட்சியுடனேயே தங்களுக்கு பிரச்சினைகள் இருப்பதாகவும் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a comment