அரசாங்கம் இனவாதிகளைத் தண்டிக்காது மௌனம் காக்கிறது- JVP

247 0

தேசிய ஒற்றுமையை வளர்ப்பதாக கூறிக்கொண்டு இனவாதத்தை பரப்பி நாட்டை சீரழிக்கவே அரசாங்கம் முயற்சிப்பதாகவும், இப்போது பரப்பப்படும் இனவாதத்தின் எல்லை மிகப்பெரிய இன அழிவில் முடியும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பழைய திருடர்களை விரட்டிவிட்டு புதிய கொள்ளையர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். இரு திருடர்கள் கூட்டணியும் இணைந்தே நாட்டை கொள்ளியாடித்து  வருகின்றனர்.

நாட்டில் இனவாதம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. நாம் இனவாதத்தில் இழந்தவை அதிகமாகும். இந்த அனுபவங்கள் எமக்கு நன்றாகவே உள்ளது. இப்போது மீண்டும் அதே பாதையில் செயற்பட்டு வருகின்றது. முன்னைய அரசாங்கம் இனவாதிகளின் பின்னணியில் இருந்தனர். சில சேனாக்கள் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டது. இந்த அரசாங்கம் இனவாதிகளை தண்டிக்காது மௌனம் காக்கின்றது.

அரசாங்கம் சூழலை  பாதுகாப்பதை விடுத்து  சூழலை மேலும் மாசுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதேபோல் சர்வதேச நாடுகளுக்கு நிலங்களை விற்று பிரச்சினைகளை மேலும் மோசமாக்கி வருகின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்

Leave a comment