தன் மீது குற்றம் சுமத்தியே அரசாங்கம் அதன் குறைகளை மறைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வெளியெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலை குறித்து சிந்திக்க வேண்டும்.
இராணுவத்தினரும் பௌத்த மதகுருமாரும் மக்களும் பெரும் கஸ்டங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
அரச அதிகாரிகளுக்கு முன்பு இருந்த சுதந்திரம் தற்போது இல்லை.
அனர்த்த காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் பின்னிற்கவில்லை.
அவர்கள் சுயாதீனமாக செயற்பட்டனர்.
அண்மைய அனர்த்தத்தின்போது அத்தகையதொரு சூழ்நிலை தென்படவில்லை.
பொது மக்கள் விரைந்து செயற்படாமல் இருந்திருந்தால், அனர்த்தத்திற்கு முகம் கொடுத்தவர்கள் 2 நாட்களுக்கு உணவு வசதிகள் எதுவும் இன்றி பாதிக்கப்பட்டிருப்பர்.
அரசாங்கம் மிகவும் பின்னடைவான நிலையில் உள்ளது.
இந்தநிலையில், தமது குறைகளை மறைத்து கொள்வதற்காக மகிந்த ராஜபக்ஸ என்ற பெயரை பயன்படுத்துவதாக மகிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

