7 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு

256 0

7 மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாளங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ரத்தினப்புரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலிய ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எலியகொட – கரந்தன – கிரில்லவல மலை மண்சரிவு காரணமாக அங்கிருந்த பல குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Leave a comment