ஸ்ரீ ல.சு.கட்சிக்குள் மீண்டும் 3 பிரிவுகள் ?

225 0

நல்லாட்சி அரசாங்கத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னர் தொடர்ந்தும் நிலைத்திருப்பதா? இல்லையா என்பதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் மூன்று விதமான கருத்துக்கள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதா? அல்லது எதிர்க் கட்சியில் அமர்வதா? அல்லது கூட்டு எதிர்க் கட்சியுடன் இணைந்து செயற்படுவதா? என மூன்று விதமான கருத்துக்கள் நிலவுவதாக கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இன்னும் பிளவுகள் உருவாகும் வாய்ப்புக்கள் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கட்சியின் கொள்கைகளையும் விட்டுக் கொடுத்துக் கொண்டு ஐ.தே.க. யின் பின்னால் இருந்து கொண்டு செயற்பட முடியாது எனவும் கட்சியிலுள்ள முக்கிய உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a comment