நாடு முழுவதும் மத நல்லிணக்க குழு -அரசாங்கம்

310 0

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நாட்டிலுள்ள சமயத் தலைவர்கள் மற்றும் சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் ஆகியோரைக்  கொண்ட குழுக்களை நாடு முழுவதும் அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டிலுள்ள சகல பிரதேச செயலகங்களையும், மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த குழுக்களை அமைக்கவுள்ளதாகவும், மாவட்ட செயலாளர் இதன் தலைவராக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் உருவாகி வரும் மத முரண்பாடுகளையும் இனப் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு இந்த குழுக்கள் அமைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment