மக்களின் கொந்தளிப்பை குறைக்க உதவுமாறு கோரிக்கை – வடமாகாண முதல்வர்

244 0
வடமாகாண முதல்வர் கௌரவ நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்  நல்லூர் ஆதீனகர்த்தாவைச்சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது முதல்வர் விக்கனேஸ்வரன் தற்போது என் மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக மக்கள் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டார்கள் அது சில கறுப்பு ஆடுகளினால் திசை திருப்பப்பட்டு வன்முறைக்கும் இட்டு செல்லப்படலாம் எனவே சமய தலைவர்களாகிய நீங்கள் இந்த விடயங்களை மக்களின் கவனத்தை கொண்டு வாருங்கள். மக்களை கெட்ட வழியில் செல்ல விடாது தடுக்க உதவுங்கள் என முதல்வர் நல்லை ஆதினத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இச்சந்திப்பின் போது அவருடன் வடமாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம்,  பா.கஜதீபன், திருமதி அனந்திசசிதரன்,  ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a comment