முதலமைச்சருக்கு எதிரான செயற்பாட்டிற்கும் சுதந்திரக் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை

230 0

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சருக்கு எதிராக செயற்படுவது தொடர்பான முடிவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் இலஞ்ச ஊழல் தொடர்பாக எடுத்த எந்த ஒரு முடிவுக்கும் எதிராக தாம் செல்லவில்லை என்றும், அவ்வாறான பணிப்புரைகள் எதையும் ஜனாதிபதி தமக்கு வழங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெயரை பயன்படுத்திக்கொண்டு வடக்கு முதலமைச்சருக்கு எதிராக செயற்படுவது அவர்கள் தன்னிச்சையாக எடுத்த முடிவாகும்.

அவர்களால் அறிவிக்கப்பட்ட முடிவுக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லை என அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a comment