உறுப்பினர்கள் 38 பேரும் நிலைப்பாட்டை தெரிவித்ததும் நடவடிக்கை எடுப்பேன் – வடக்கு ஆளுநர்

257 0

வட மாகாண சபையின் 38 உறுப்­பி­னர்­களும்  முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்­பான  தமது நிலைப்­பாட்டை என்­னிடம் தெரி­வித்­ததும் நான் முத­ல­மைச்­ச­ரிடம்  பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கு­மாறு கோருவேன் என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரி­வித்தார்.

தற்­போது வடக்கில் என்ன நடக்­கி

ன்­றது என்று நான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அறிக்­கை­யிட்டு வரு­கின்றேன்.  சட்­டத்தின் பிர­காரம் செயற்­ப­டு­மாறு ஜனா­தி­பதி என்னை பணித்­துள்ளார்  என்றும் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே சுட்­டிக்­காட்­டினார்.

வடக்கு மாகாண சபையில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டியின் தற்­போ­தைய நிலை என்­ன­வென்று வின­வி­ய­ போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது  தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

வடக்கு  மாகாண சபையில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை தொடர்­பாக  நான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அவ்­வப்­போது அறிக்­கை­யிட்டு வரு­கின்றேன்.  ஜனா­தி­ப­திக்கு  இது தொடர்பில் முழு­மை­யான தக­வல்­க­ளையும் வழங்­கு­வது என்­னு­டைய பொறுப்­பாகும்.

இதே­வேளை   வட மாகாண சபை நெருக்­கடி விவ­கா­ரத்தில் சட்­டத்தின் பிர­காரம் செயற்­ப­டு­மாறு ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன என்­னிடம் கூறினார். அந்­த­வ­கையில் நான் சட்­டத்தின் பிர­காரம் செயற்­ப­டுவேன்.

கேள்வி : பெரும்­பான்மை பலத்தை நிரூ­பிக்­கு­மாறு வடக்கு முத­ல­மைச்­ச­ரிடம்  கேட்­டுள்­ளீர்­களா? 

பதில்: இது­வரை பெரும்­பான்மை பலத்தை நிரூ­பிக்­கு­மாறு வடக்கு முத­ல­மைச்­ச­ரிடம்  கோர­வில்லை.  விரைவில் அந்த கோரிக்­கையை விடுப்பேன்.

கேள்வி : இதில் ஏன் தாமதம்? 

பதில்  : வட மாகாண சபையில் 38 உறுப்­பி­னர்கள் உள்­ளனர்.   வட மாகாண சபையின் 38 உறுப்­பி­னர்­களும்  முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை  தொடர்­பான  தமது நிலைப்­பாட்டை என்­னிடம்  தெரி­வித்­ததும்  நான் முத­ல­மைச்­ச­ரிடம்  பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கு­மாறு கோருவேன். இது­வரை என்­னிடம்  38 பேரும்  நிலைப்­பாட்டை அறி­விக்­க­வில்லை.  சில உறுப்­பி­னர்கள் வெளிநாட்டில் இருப்­ப­தா­கவும் சிலர் கொழும்பில் இருப்­ப­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனவே அவர்கள் அனை­வரும்  தமது நிலைப்­பாட்டை அறி­வித்­ததும் தேவை­யான  நட­வ­டிக்­கை­களை சட்­டத்தின் பிர­காரம் முன்­னெ­டுப்பேன்.

கேள்வி : இது­வரை எத்­தனை உறுப்­பி­னர்கள்  விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் தமது நிலைப்­பாட்டை அறி­வித்­துள்­ளனர் என்று கூற முடி­யுமா?

பதில் : அதனை தற்­போது நான் கூறு­வது பொருத்­த­மா­ன­தாக அமை­யாது.   அவ்­வாறு நான் கூறி­விட்டால் அது   இதற்கு பின்னர்  இந்த விவகாரம்  தொடர்பில் தீர்மானம் எடுப்பவர்களுக்கு  தாக்கம் செலுத் துவதாக அமையும். குறிப்பிட்ட  சிலர் முதலமைச்சருக்கு  ஆதரவாகவும்  சிலர்  எதிராகவும்   தமது நிலைப்பாட்டை அறிவித் துள்ளனர். அதனை மட்டுமே என்னால் கூற முடியும் என்றார்.

Leave a comment