அமைச்சுப் பொறுப்பை தூக்கி எறிந்து விட்டு நீதியை நிலை நாட்ட தயார் – பா.டெனிஸ்வரன்

233 0

அமைச்சுப் பொறுப்பை தூக்கி எறிந்து விட்டு நீதியை நிலை நாட்டுவதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் எவ்வளவு நிதி மோசடி செய்தார்.எங்கு செய்தார் ? எப்போது செய்தார்? என்ற தொகை மதிப்பீட்டை வெளிப்படுத்த முடியுமா? என இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை வெளிவந்தவுடன் குறித்த விடயங்களை கணக்காய்வுக்கு உட்படுத்த வேண்டும் என இரண்டு நீதிபதிகளும்,முன்னாள் அரச அதிபரும் கூறியிருந்தனர்.

அறிக்கை கிடைத்தவுடன் கணக்காய்வுக்கு உற்படுத்தி ஊழல் செய்த தொகை எவ்வளவு என்பதனை உறுதி செய்து அறிவித்திருக்க வேண்டும்.

எனினும் அவ்வாறு இடம்பெறவில்லை.

இந்த நிலையில் அமைச்சர் ஐங்கரநேசன் மீதும் வீண் பழி சுமத்தப்பட்டு வீணாக தண்டிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், மோசடிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை பிழையான கோணங்களிலேயே விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment