முள்ளிவாய்க்காலில் வாழ்வாதார உதவி வழங்கல் – தமிழ் பெண்கள் அமைப்பு – பேர்லின் ,யேர்மனி

5152 0

தமிழ் பெண்கள் அமைப்பினரின் ஒழுங்கமைப்பில் பேர்லின் வாழ் தமிழ் மக்களின் பேராதரவில் நடைபெற்ற கலைமாருதம் 2017 நிகழ்வில் பெறப்பட்ட நிதியில் முதற்கட்டமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த வறிய நிலையில் உள்ள 30 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாய்க்கும் மேலான பெறுமதியான வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலும் முள்ளிவாய்க்கால் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்போடும் மேற்குறிப்பிட்ட நிகழ்வு நடைபெற்றது. போரினால் பாதிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மக்களை மீண்டும் தலைநிமிர வைக்கும் முகமாக தொடர்ச்சியாக முதற்கட்ட உதவிகளை மேலும் ஏனையவர்களுக்கு செய்யும் சமநேரத்தில் அவர்களை ஒருபோதும் கையேந்தும் நிலைக்கு கொண்டுசெல்லாத வகையில் சுயதொழில் வாய்ப்புகளை செய்துகொடுக்கும் முயற்சியும் நடைபெறுகின்றது.

தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி

 

Leave a comment