வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத்தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

481 0

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத்தெரிவித்து, இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு முன்னால், தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவான ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கோசங்களை எழுப்பியவாறு முதலமைச்சரின் வாசஸ்தலம் நோக்கி வருகை தந்தனர்.

தொடர்ந்து முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Leave a comment