வடக்கு முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

441 0

வடக்கு மாகாண முதலமைச்சர் மீது தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30 மணிக்கு பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மக்கள் தெருவில் மாகாணசபை திமிரில், முதல்வர் எடுத்த முடிவை மாற்ற வேண்டாம், வாக்கிற்கு நாம் – எம்மை சுரண்ட நீங்களா? மத்திய அரசின் கைக்கூலியா தமிழரசு? எதிர்க்கட்சிகளோ கூட்டு தமிழ் மக்களுக்கு வேட்டு, குற்றவாளிகள் நீதிபதியை தண்டிப்பதா? போன்ற வாசகங்களை தாங்கி நின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பொது அமைப்புக்கள், மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எஸ்.மயூரன், ப,தியாகராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a comment