அரசாங்கத்தை கவிழ்க்க ராஜபக்ச குடும்பம் சூழ்ச்சி- விக்ரமபாகு கருணாரட்ன

219 0

அரசாங்கத்தை கவிழ்க்க ராஜபக்ச குடும்பத்தினர் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக, நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் விக்ரமபாகு கருணாரட்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

சூழ்ச்சியில் ஈடுபட உதவும் நபர்கள் அரசாங்கத்திற்குள் இருப்பதாகவும் , அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ராஜபக்ச கூட்டத்தை சேர்ந்தவர் எனவும் ஜனாதிபதி கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஜனாதிபதியை சந்தித்தோம். ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருந்த பத்திரிகை செய்தியுடன் வந்திருந்தார்.

பிக்குமாரை கைது செய்யப்படுவது தொடர்ந்தால், தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க போவதாக முன்னாள் ஜனாதிபதி கூறியதாக அந்த செய்தியில் இருந்தது.

நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் ராஜபக்ச குடும்பத்தினரின் தேவைக்கு அமையவே நடப்பதாக ஜனாதிபதி கூறினார்.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்தது அதிகாரத்தை பரவலாக்க மேற்கொள்ளும் முயற்சிகளை தடுப்பதற்காகவே இனவாதம் தூண்டப்பட்டு வருகிறது எனவும் விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment