என்றும் உங்களுடன் நானிருப்பேன் – சி.வி.விக்னேஸ்வரன் கண்ணீர்மல்க தெரிவிப்பு

225 0

என்றும் உங்களுடன் நானிருப்பேன் என தனது ஆதரவாளர்கள் மத்தியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக மாகாண சபை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் முதலமைச்சர் வாசஸ்தலத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தனர்.

அதன் போதே முதலமைச்சர் நான் என்றும் உங்களுடனே இருப்பேன் என தமது ஆதரவாளர்களுக்கு தெரிவித்தார்.

எனக்காகத் திரண்டிருக்கும் உங்களிற்கு என்னால் ஒரே ஒரு வாக்குறுதியைத்தான் வழங்க முடியும். நான் என்றும் உங்களுடனேயே இருப்பேன். இதுவே எனது வாக்குறுதி என்றார் முதலமைச்சர்

Leave a comment