யாழ்.நீதிபதி சொன்னதால் குத்தினேன்- கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம்!

398 0

FotorCreated-307சுன்னாகம் பகுதியில் பெண்ணொருவரைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தரை அப்பெண்ணின் சகோதரன் முகத்திலேயே குத்திய காயப்படுத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த உடுவில் பகுதியைச் சேர்ந்த கே. அதிஷ்டராஜா (வயது 45) என்ற குடும்பஸ்தர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. மேற்படி குடும்பஸ்தர் நீண்டகாலமாக தனது தங்கைக்குத் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் அதனாலேயே தொந்தரவு கொடுத்தவரின் முகத்திலேயே தான் குத்தியதாகவும் அந்நபர் தெரிவித்துள்ளார்.

3 சகோதரிகளுக்குத் தொந்தரவு கொடுப்பவர்களுக்கு முகத்திலேயே குத்துங்கள் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கூறியதற்கமைய தான் இவ்வாறு செய்ததாகவும் அப்பெண்ணின் சகோதரன் சுன்னாகம் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.