வெள்­ளத்தில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு இல­வச மின் இணைப்பு

331 0

வெள்ள நிலை­மையின் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் மின்­சார கட்­ட­ணங்­களை அறவிடா­தி­ருக்­கவும் மின்­மா­னிகள் மற்றும் மின் இணைப்­புக்­களை இலவ­ச­மாக பெற்­றுக் ­கொ­டுக்­கவும் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக மின் சக்தி மற்றும் மீள் புத்­து­ரு­வாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரி­வித்தார்.

அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் தெரி­வித்தார்.

தற்­போது மின்­சாரம் வழங்கும் செயற்­பா­டு­களில் பெரிதும் பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ளன. சில பிர­தே­சங்­களில் மின் கட்­ட­மைப்­புக்கள் மீள் திருத்­தப்­பட்டு வரு­கின்­றன.

தற்­போது இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் 60 ஆயிரம்  பேருக்கு மின்­சாரம் விநி­யோ­கிக்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

அங்கு மாத்­தி­ர­மன்றி மாத்­த­றையில் 1 இலட்­சத்து 26 பேருக்கும் காலியில் 40 ஆயிரம் பேருக்கும் மாத்­த­றையில் 40 ஆயிரம் பேருக்கும் மின்­சாரம் விநி­யோ­கிக்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

மின் இணைப்­புக்­களை பெற்­றுக் ­கொள்ள வேண்டும். எனின் 011 30 30 303 என்ற இலக்கத்­ திற்கு அழைத்து தமது முக­வ­ரி­களை அறி­வித்தால் மின்­சார சபையின் உட­னடி செயற்பாட்டு குழுக்கள் விரைந்து மின்­சா­ரத்தை பெற்­றுக்­ கொ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­பார்கள்.

அதே­நேரம் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக மின்­சா­ரத்தை பெற்­றுக்­கொ­டுத்து அவர்­களின் வீட்­டிற்கு மின் மானிகளை இல­வ­ச­மாக  வழங்­கவும் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்ளது.

அதி­க­ள­வி­லான மின்­சார கட்­ட­ணத்தை செலுத்த வேண்­டி­யி­ருக்­கின்­ற­வர்­க­ளுக்கு 6 மாத கால சலு­கை­யினை வழங்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.