தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்தின் ஒரு அங்கம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

255 0

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்தின் ஒரு அங்கமாக செயற்படுவதாக, தமிழ்த்தேசிய மக்கள் முன்ணணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் அரசாங்கத்தையும் பிரித்து பார்ப்பது தவறு எனவும் அரசும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஒன்றுதான் என அவர் குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எட்டு வருடங்களாக பிரச்சினையை எதிர் கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த மார்ச் மாதம் ஜக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையகத்தினால் அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியது தமிழ்த்தேசியக் கூட்டமைப்;பின் அனுமதியுடனேயே எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.