நுவரெலியா தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு(காணொளி)

364 0

நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று பிற்பகல் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 55 வயது மதிக்கதக்க பெண்ணொருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக, குறித்த பெண் அண்மையில் பெய்த மழையினால் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு உயிரிழந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து குளத்தில் எறிந்து சென்றார்களா என்பது தொடர்பாக, பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண விசாரணைகளின்பின் சடலம் வைத்திய உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.