மண்சரிவு மற்றும் வௌ்ளநிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183ஆக அதிகரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், 103 பேர் இதனால் காணாமல் போயுள்ளனர். அத்துடன், அனர்த்தங்களில் சிக்கி 112 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 142,811 குடும்பங்களைச் சேர்ந்த 5,45,283 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

