இங்கிரிய – நம்பபான பிரதேசத்தில் நேற்று மாலை நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரும்பு கம்பியினால் தாக்கப்பட்டு அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் 51 வயதான நபரொருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 36 மற்றும் 39 வயதான இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காணி பிரச்சினை தொடர்பாக இந்த கொலை இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
சடலம், இங்கிரிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது

