கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலத்தில் தம்மை மீள குடியேற்றுமாறு கோரி ஆரம்பித்த தொடர் போராட்டம் இன்றுடன் 90 ஆவது நாளை எட்டியுள்ளது.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டநிலையில் தாம் இன்று இருப்பதாகவும் தம்மை விரைவில் குடியேற்றுமாரும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
சுமார் மூன்று மாதகாலம் வீதியில் நாம் கிடப்பது யாருக்கும் தெரியவில்லையா அல்லது தெரிந்துகொண்டும் எம்மை கணக்கெடுக்காது இருக்கிறார்களா நாம் செத்து மடிவதற்கு முன்னம் குடியமர்த்துமாறு கோரி நிக்கின்றனர்.

