ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பல்பிட்டவுக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பாக ஆஜரான சட்டதரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் திலின கமகே இன்று வெள்ளிக்கிழமை (20) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

