கொழும்பு – தொட்டலங்க பகுதியில், போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று வியாழக்கிழமை (19) மாலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான 21,000 வெளிநாட்டு சிகெரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
54 வயதுடைய இந்த சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை, குறித்த சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை தொடர்பில் அன்றைய திருகோணமலை நகரசபையால் திருகோணமலை நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன் பின்னர் கொழும்பு நீதிமன்றில் விகாராதிபதியால் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் அங்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை (20) கொழும்பு நீதிமன்றில் இருந்ந நிலையிலேயே குறித்த சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டு தற்காலிக அனுமதிக்கு ஏற்றவாறான கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

