இலங்கைக்கு ரஷ்ய ஜனாதிபதி அனுதாபம்

254 0

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடமீர் புட்டின் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இதுவரையில் 126 பேர் உயிரிழந்துள்ளதுடன், 97 பேர் தொடர்ந்தும் காணாமல் போன நிலையில் உள்ளனர்.

அத்துடன் சுமார் 4 லட்சத்து 23 ஆயிரத்து 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்த அனர்த்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை, பலியான வான்படை சாஜன்ட் வை.எம்.எஸ் யாபாத்னிக்கு மரணத்திற்கு பின்னான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதனை வான்படை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.