கிங் கங்கை உடைப்பெடுக்கும் அபாயம் – நாளை முதல் மீண்டும் கடும் மழை

245 0

கிங் கங்கை உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பந்தேகம பகுதி மக்கள் வெளியேற்றப்படுவதாக மாவட்ட உதவி அரசாங்கம் அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடந்த சில நாட்களாக தொடர்ந்த மழையுடனான காலநிலை இன்று ஓரளவு குறைவடைந்தாலும், பருவப் பெயர்ச்சி காலநிலை காரணமாக நாளை தொடக்கம் மீண்டும் கடும் மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, நாளை தினத்தில் இருந்து தென்மேற்கு பகுதிகளில் 150மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.