சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக நடைபெறவுள்ள ராஜ்யசபா எம்.பி தேர்தல், தமிழக அரசியலில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. சீட் கேட்டு கூட்டணிக் கட்சிகள் நெருக்குவதால் திமுக, அதிமுக வட்டாரம் திகிலில் உறைந்துள்ளது.
மாநிலங்களவையில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, அந்தியூர் செல்வராஜ் ஆகிய திமுக எம்.பி.க்கள் மற்றும் அதிமுகவின் தம்பிதுரை, அதிமுக ஆதரவோடு எம்.பியான தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவி காலம் முடிவடைவதால், அந்த இடங்களுக்கு மார்ச் 16-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே ராஜ்யசபா தேர்தல் நடக்கவுள்ளதால், திமுக, அதிமுக எனும் இரு பிரதான கட்சிகளும் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. காலியாகும் 6 இடங்களில் தற்போதைய சூழலில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் உறுதி. ஆனால், இந்த இடங்களுக்கு கூட்டணி கட்சிகளும் குறிவைத்துள்ளதால், இரு கட்சிகளும் விழிபிதுங்கி நிற்கின்றன.

