காற்றின் வேகம் அதிகரிப்பு அவதானத்துடன் இருக்க கோரிக்கை

296 0

நாட்டில் நிலவும் கன­மழை மற்றும்  சீரற்ற கால­நிலை கார­ண­மாக இலங்­கையின் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ­மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் கட­லோர பகு­தி­களில் மக்கள் மிகவும் அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறும் வானிலை அவ­தான நிலையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. 

கடந்த மூன்று நாட்­க­ளாக நாட்டில் கன­மழை பெய்­து­வரும் நிலையில் நாட்டின் 14 மாவட்­டங்கள் அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக களுத்­துறை,  இரத்­தி­ன­புரி மாவட்­டங்கள்  முழு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்ள அதே வேளையில் கேகாலை, காலி பகு­தி­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் நாட்டின் இந்த மோச­மான கால­நிலை இந்த மாதம் இறுதி வரையில் நீடிக்கும் நிலையில் நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளுக்கு தொடர்ந்தும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டு வரு­கின்­றது.