போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் கிளிநொச்சி மக்கள் 100 நாளில் சர்வ மத பிரார்த்தனை

362 0

வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் போராட்டத்தின் நூறாவது நாளில் மாபெரும் சர்வ மத பிரார்த்தனை கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் உறவுகள் அனைவரும் எதிர்வரும் 30ஆம் திகதி காலை 9 மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஒன்று கூடுமாறு காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுக்கான நீதியை கோரி தொடர்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இதுவரை அரசிடம் இருந்து உரிய பதில் வழங்கப்படவில்லை.

அந்த வகையில் காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி 100 ஆவது நாளை எட்டவுள்ள நிலையில் குறித்த திகதியில் மாபெரும் சர்வமத பிரார்த்தனை ஒன்றை கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.