தெற்கு அதிவேக வீதியின் இரு நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளன

246 0

கடவத்த முதல் மாத்தறை வரையான தெற்கு அதிவேக வீதியின் கடுவலெ மற்றும் பியகம நுழைவாயில்களிலிருந்து வாகனங்கள் வெளியேறுவது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் கொட்டாவ, அத்துருகிரிய ஆகிய மாற்று நுழைவாயில்களை பயன்படுத்துமாறு அதிவேக வீதி நிர்வாகம் மற்றும் மேற்பார்வைப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் கடுவெல மற்றும் பியகம வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்