சீரற்ற காலநிலை ; 4 இலட்சம் பேர் இடம்பெயர்வு, 120 பேர் பலி

273 0

சீரற்ற காலநிலையின் காரணமாக இதுவரை இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 93ஆயிரத்து 455ஆக அதிகரித்துள்ளது.
185 நலன்புரி முகாம்கள் இவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிடடார்.

அதேவேளை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சுகாதார சேவைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.