சுவாமி விபுலானந்தரின் 125 வது ஜனன தினத்தையொட்டிய விசேட நிகழ்வுகள் மட்டக்களப்பில் (காணொளி)

306 0

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 125 வது ஜனன தினத்தையொட்டிய மாபெரும் விழிப்புணர்வு எழுச்சி பேரணியும், சிறப்பு நிகழ்வுகளும் சுவாமி விபுலானந்தர் சங்க தலைவரும், வலய கல்விப் பணிப்பாளருமான கே.பாஸ்கரன் தலைமையில் இன்று நடைபெற்றன.

விழிப்புணர்வு பேரணியை தொடர்ந்து மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் உள்ள மணி மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், மட்டக்களப்பு வர்த்தக சங்க அங்கத்தவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

சுவாமி விபுலானந்தரின் 125 வது ஜனன தினத்தை விசேட தினமாக சிறப்பிக்கப்பட்டு, இளம் சந்ததியினர் மத்தியில் சுவாமி விபுலானந்தர் தொடர்பான விடயங்களை தெரியப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் முன்னேடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.